Monday, November 5, 2012

STPM தமிழ்மொழி பாடத்திட்டம் வாசித்தலும் கருத்துணர்தலும்



STPM மிழ்மொழி
பாத்திட்டம்
 
1 வாசித்தலும் கருத்துணர்தலும்


மாணவர்கள் உறுதியாக: 

(அ) முக்கியக் கருத்துகள், துணைக் கருத்துகளை அடையாளம் காண்பர்;

(ஆ) கருத்துணர் கேள்விகளுக்கு ஆய்வுச் சிந்தனை, ஆக்கச் சிந்தனை அடிப்படையில் விடையளிப்பர்;

(இ) தெரிநிலை, புதைநிலை ஏடல்களை வேறுபடுத்துவர்;

(ஈ) பனுவலிலுள்ள கருத்துகளைப் பகுத்தாய்வர், மதிப்பிடுவர்;

(உ) பனுவலைப் பகுத்தாய்வர்; விளக்குவர்.

உரைநடை அல்லது உரைநடை அல்லாத பனுவல்கள் இப்பிரிவில் இடம்பெறும்.

இப்பிரிவில் இணையம், அச்சுயியல், மின்னியல் ஆகிய தகவல் ஊடகங்களில் வெளியான உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் மொழி இலக்கியப் படைப்புகள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட 400-450 சொற்கள் கொண்ட பனுவல் ஒன்று கொடுக்கப்படும்.

இப்பனுவல் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலை, பண்பாடு, மொழி, இலக்கியம், சமூகவியல், சமகாலப் பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும்.

இப்பகுதியில் ஐந்து கேள்விகள் கொடுக்கப்படும். மாணவர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.



2 இலக்கணம்:

சொல்லியல்

      (i) பெயர்ச்சொல்

                 —    பொருட்பெயர்
                 —    இடப்பெயர்
                     காலப்பெயர்
                 —    சினைப்பெயர்
                 —    பண்புப்பெயர்
                 —    தொழிற்பெயர்


மாணவர்கள் உறுதியாக:

(அ) தமிழிலுள்ள பெயர்ச்சொற்களின் வகைகளை அறிவர்; முறையாகப் பிழையின்றிப் பயன்படுத்துவர்;

     (ii) வினைச்சொல்
             தெரிநிலை  வினைமுற்று
             குறிப்பு வினைமுற்று 

     (iii) பெயரெச்சம், வினையெச்சம் 

     (iv)  பெயரடை, வினையடை 

     (v)  இடைச்சொல் 
         வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், 
         சாரியைகள்,  வினா எழுத்துகள், சுட்டு எழுத்துகள், அசைச் சொற்கள், உம், உவம 
         உருபுகள், அம், கொல்மற்று, ,
 
(ஆ) வினைமுற்றுகளின் வகைகள், பயன்பாடு முதலியவற்றை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(இ) அடைகளுக்கும் எச்சங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(ஈ) வாக்கியத்தில் அடைகள், எச்சங்கள் ஆகியவற்றின் பங்கினை அறிவர், பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(உ) இடைச்சொற்களை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர். 

இப்பிரிவில் இரண்டு கேள்விகள் கொடுக்கப்படும் மாணவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


ன்றி : லேசித் தேர்வு வாரியம்
தொகுப்பு: ந.மிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்.  

No comments:

Post a Comment