Wednesday, December 5, 2012

STPM தமிழ்மொழி மதிப்பீட்டு முறை



STPM தமிழ்மொழி மதிப்பீடு 

தமிழ்மொழித் தேர்வு மூன்று தவணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மலேசியத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகின்றது. 

தவணை 1 

தாள் 912/1 (2 மணி)

இவ்வினாத்தாள் A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

A பிரிவில் வாசித்தல் கருத்துணர்தல் பகுதியிலிருந்து ஐந்து வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (30 புள்ளிகள்)

B பிரிவில் இலக்கணத்தில் சொல்லியல் பகுதியிலிருந்து இரண்டு வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (20 புள்ளிகள்)

C பிரிவில் நவீன இலக்கியம் கவிதை பகுதியிலிருந்து இரண்டு சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

D பிரிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறும் வளர்ச்சியும் பகுதியிலிருந்து இரண்டு சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

தவணை 2

தாள் 912/2 (2 மணி)

இவ்வினாத்தாள் A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

A பிரிவில் கட்டுரை அடிப்படையிலான கருத்துரைத்தல் கேள்வி ஒன்று கேட்கப்படும். மாணவர்கள் இவ்வினாவிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

B பிரிவில் தொடரியல் குறித்து மூன்று சிறு குறிப்பு வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

C பிரிவில் சங்க இலக்கியம் மற்றும் காப்பிய இலக்கியம் குறித்து இரண்டு சிறு குறிப்பு அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

D பிரிவில் நவீன இலக்கியம் நாவல் குறித்து இரண்டு சிறு குறிப்பு அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

தவணை 3

 தாள் 912/3 (2 மணி)

இந்தத் தவணைக்கான மதிப்பீட்டு முறை A, B, C ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

A பிரிவில் பொது வடிவம். சிறப்பு வடிவம் அடங்கிய மூன்று கட்டுரை தலைப்புகள் வழங்கப்படும். மாணவர்கள் ஒரு தலைப்பை மட்டும் தெரிவுசெய்து 450 முதல் 500 சொற்களூக்குள் கட்டுரை எழுத வேண்டும். (50 புள்ளிகள்)

B பிரிவில் இடைக்காலம் மற்றும் நீதி இலக்கியத்தையொட்டி இரண்டு சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
 
C பிரிவில் தமிழ்ச் சிறுகதையையொட்டி இரண்டு சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)

நன்றி : STPM தமிழ்மொழிப் பாடத்திட்டம், மலாயாப் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment